விநாயகர் கவசம்
அழைத்தோர்க்கோர் இன்பமுண்டாம் ஆற்றலுண்டாம்
உள்ளில் இழைத்தார்கோ அன்புடனே இன்பம்
விழைந்தேறும் சித்தியும் சேர்ந்திடும்
ஸ்சிரி கணநாதனின் சக்தி கவசத்தினால்
சூழுமிடர்தீர சுளி போட்டு நெஞ்சே நீ
வேழுனடி நோக்கே விரை
கருணை பொங்கும் கற்பக நிதியே
காலம் எல்லாம் ஆளும் கதியே
உருவ விந்தையே உலகின் ஆதியே
ஒய்யார வடிவாய் அசையும் அழகே
ஓங்காரமாம் பிரணவ எழுத்தின்
உயரிய வடிவம் கொண்டு விளங்கும்
சிங்காரமே சிவனார் மகனே
சைவ அறத்தின் தெள்ளிய பொருளே
கணங்கள் சூழ்ந்திட அமர்ந்திடும் பதியே
கரிமாமுகனே ஸ்ரி கணநாதா
துணையாய் என்|றும் எம்மை எங்கும்
சூழ்ந்து காத்திடும் தும்பிக்கையானே
பார்வதி தேவியின் செல்லப் பிள்ளையே
பாரினைக் காக்கும் பரிவுப் பிள்ளையே
தீர்வுகளாய் பல புதிர்களின் விடையை
தெளிவாய் அருளும் ஞானச் செ|றிவே
தத்துவ வடிவம் மொத்தமும் காட்டும்
தன்னிகர் இல்லாத் தனிப் பெரும் இறையே
சித்துகளாய் பல லீலைகள் செய்யும்
தீரா வினைகள் தீர்க்கும் மறையே
ஆனை முகத்துப் பிள்ளாய் வருக
ஆடி ஆடி அசைந்தே வருக
தேனை வைத்தோம் முன்னே வருக
தெய்வக் களிறே இங்கே வருக
காக்கை வடிவாய் யாக்கை கொண்டு
காவிரி கவிழ்த்த கடலே வருக
தூக்கும் துதிக்கை தூக்கி அணைக்கும்
தோகை மயிலோன் முன்னோன் வருக
விகட ரூபனே வருக வருக
விஸ்வ ரூபனே வருக வருக
சகடமாக முகாலமும் உருட்டும்
சக்தி நாதனே வருக வருக
சித்தியின் புத்தியுன் சிந்தை நிறைந்து
செவ்விய கோலம் தந்திடும் நாதா
புத்தியில் சித்தியை தந்திடும் பரமே
பூரணம் ஆகிய புனிதா வருக
கார் நிறத் தேகக் கரிமா முகனே
கனிவுடன் வருக கனிவுடன் வருக
வேல் வீரம் ஏறிய ஸ்வேத நாயகா
வெள்ளெருக்கோனே வருக வருக
வருக வருக கணநாதா வருக
வருக வருக கணங்கள் சுழ்ந்தே
வருக வருக மூஸிக வாகன
வருக வருக மோதகப் பிரியனே
எட்டுத் திசைகளும் சுற்றிப் பணிந்திட
ஏக தந்தனே இங்கே வருக
விட்டு விடாமல் கை கொடுத்திடவே
விக்ன விநாயக விரைவாய் வருக
தகுதகு திந்திமி தத்தாளங்கு திமி
ஜதிகள் போட்டு சடுதியில் வருக
அகமும் புறமும் குளிரும் வண்ணம்
ஆடிய பாதனே அசைந்து வருக
கங்கம் என்னும் மந்திர பீஜம்
காற்றில் ஒலிக்க வருக வருக
கிலீம் க்லௌம் என்னும் அட்சரம் ஒலிக்க
கிரீட கணாதிப வருக வருக
சிவகைலாய செல்வா நீயும்
சீக்கிரமாக வருக வருக
கவலை யாவும் போக்கிட ஜயா
கடுகியே வருக கடுகியே வருக
அழகிய வடிவாய் அமரும் அழகும்
அன்பு நிரம்பிய பார்வை அழகும்
பழகிய முகத்தில் பரவிய அழகும்
பார்க்க பார்க்க தூண்டும் அழகும்
கடினம் கொண்டு கவினுடன் விளங்கும்
கரிய நிறத்து மத்தக அழகும்
முடியும் மணிமுடி முத்தும் பொன்னும்
மொத்தம் இழைந்திட ஒளிரும் அழகும்
பாலச் சந்திரனை பாதி எடுத்து
பக்குவமாக தரித்த அழகும்
மேலும் கீழும் சொல்வதைக் கேட்டு
விரைவாய் ஆட்டும் தலையின் அழகும்
யானைத் தலையை ஏந்திக் கொண்டு
எழிலாய்க் கோலம் கொள்ளும் அழகும்
ஞானம் அளிக்கும் நெற்றியின் அழகும்
நெற்றிப் பரப்பில் நீற்றின் அழகும்
வெண்மதி சூரியன் தீயென மூன்றே
இழையின் வடிவில் காட்டும் அழகும்
தன்னடியாரவர் வேண்டுதல் கேட்டு
சாமரமாகிடும் செவியின் அழகும்
சிறுவிழியாலே சிரித்திடும் அழகும்
செவிகளின் மணியை அசைத்திடும் அழகும்
அருகினில் வாவென அழைத்திடும் வண்ணம்
அழகுத் துதிக்கையை ஆட்டிடும் அழகும்
வலம்புரி இடம்புரி என்னும் வகைபடி
வளைவுகள் கொண்ட துதிக்கை அழகும்
நலம் பல தந்திட நயம் பல தந்திட
நான்காய் அமைந்த திருக்கை அழகும்
மகாபாரதம் எழுதிட வேண்டி
வண்ணத் தந்தம் ஒன்றை உடைத்து
மகா காவியம் எழுதியதாலே
ஒற்றைத் தந்தமுடன் விளங்கும் அழகும்
இணையாய் தோள்கள் இரண்டின் அழகும்
இணையில்லாத் தோள் வளையின் அழகும்
கணங்கள் தோறும் வரங்கள் தந்து
கமலம் போலச் சிவந்த கரங்களும்
பாசம் அங்குசம் தாங்கிய கரத்துடன்
பாசம் காட்டிடத் துடிக்கும் அழகும்
பூசிய சந்தணம் மணந்திடச் சுடரும்
பொலிவுடன் தோன்|றும் மணியணி மார்பும்
அண்டம் அனைத்தும் உண்டு வளர்த்து
அழகாய்ச் சரிந்த தொந்தியின் அழகும்
வண்ண இடையினில் அரவம் தன்னை
வகையாச் சூடிய கச்சையின் அழகும்
இருதிரு வடியும் இணைமுழந் தாளும்
இசையத் தோன்றி விளங்கும் அழகும்
திருவருள் ஏந்தி தாமரை போல
திகழ்திடும் பாதம் இரண்டின் அழகும்
விலங்கின் தோ|ற்றம் கொண்டு விளங்கும்
வேழனின் யானைத் தலையின் அழகும்
குலவும் முகமும் விழியும் கொண்டு
குலவும் மானிட உருவின் அழகும்
குட்டைக் காலும் பானை வயிறும்
கொண்டு விளங்கும் பூத அழகும்
நான்கு கரத்து தேவரின் அழகும்
நர்த்தனம் ஆடிடும் போது ஒலிக்கும்
நாதச் சதங்கை கூடிய அழகும்
மெத்த நடக்கையில் மேனியிலாடும்
மணிகளிரண்டின் எதிரொலி யழகும்
கண்ணில் காண பரவசம் ஏறும்
கருத்தில் ஏற்றால் ஆனந்தம் ஊறும்
எண்ணில்லாத கோயில் கொண்டு
எங்கும் உறையும் ஏக தந்தனே
உன்னைக் கண்டு உரைத்தால் போதும்
உடனே வருவாய் என்பது தெரியும்
என்றும் உன்னை நினைவில் ஏற்றோம்
எங்கைளைக் காக்க எப்போதும் வருக
காக்க காக்க உன்னைங் கரமே
காக்க காக்க உன்னாயுதமே
காக்க காக்க உன் திருவடிகள்
காக்க காக்க உன் மூஸிகமே
சிரத்தை சிரத்தின் உட்பகுதியுனை
சித்த கணபதி சிறப்புடன் காக்க
சிரமேல் கேசம் அதன் பற்றையினை
தேசி விநாயகன் செவ்வி காக்க
கண்களிரண்டை கருணா மூர்த்தி
கரிமா முகனே காக்க காக்க
இமைகள் இரண்டை இடைவிடாது
லம்போதரனே காக்க காக்க
செவிகள் இரண்டை சாமரக் கர்ணண்
சீருடன் என்றும் காக்க காக்க
நெற்றிப் பகுதியை சிந்தூர வர்ணன்
நிறைவு குறையாது காக்க காக்க
நாசியை விகட சக்ர விநாயகன்
நன்றாய் நாளும் கக்க காக
பேசிடும் வாயினை பேதமில்லாமல்
பிளிரும் மோதகன் காக்க காக்க
கழுத்துப் பகுதை வாதபி கணபதி
கருத்துடன் கருதி காக்க காக்க
உழைக்கும் தோள்களை ஊர்த்துவ கணபதி
உறுதி குறையா வண்ணம் காக்க
வதனப் பகுதியை இதமாய் என்றும்
வாமன மூர்த்தி கணபதி காக்க
முதுகை முதுகுப் பகுதியை இசைவாய்
மூஸிக வாகனன் முனைந்து காக்க
கும்பிடக் குவியும் கைகள் இரண்டை
கோகர்ணராஜன் குறியாய் காக்க
அம்பிகை பிள்ளை ஆதி நாயகன்
அன்புடன் வயிற்றை காக்க காக்க
நாபிக் கமல் பகுதி தன்னை
நர்த்தன கண்பதி நயமுடன் காக்க
நால்வாய் நாயகன் வயிற்றுப் பகுதியை
நன்றாய் என்|றும் காக்க காக்க
தொடைகள் இரண்டை சுர கணநாதன்
சுகமுடன் விளங்க காக்க காக்க
தொடை கீழ்பகுதியை தொய்வு இல்லாமல்
சுந்தர கணபகுதி பெருமான் காக்க
கால்கள் இரண்டை கஜமுக நாதன்
கருத்துடன் கனிவாய் காக்க காக்க
கால்களின் கீழே பாத மிரண்டை
கந்தனின் சோதரன் காக்க காக்க
நகங்கள் தம்மை நலிவு படாமல்
நவசக்தி நாயகன் காக்க காக்க
அகத்தில் வாழும் உயிரை உயிரில்
அமர்ந்து உத்தண்ட கண்பதி காக்க
உடலை உச்சிட்ட கண்பதி காக்க
உதிரம் உச்சிப் பிள்ளையார் காக்க
படரும் நரம்பை பரவும் நாடியை
பார்வதி மைந்தன் காக்க காக்க
காலை மாலை வேளை தன்னில்
கற்பகக் களிறாம் பெருமான் காக்க
நடுநிசி சாமம் அந்தி விடியலில்
நாரணன் மருகன் துணையாய் காக்க
எல்லா நேரமும் தொல்லைகள் வராது
எக தந்தன் இழைவுடன் காக்க
பில்லி சூனியம் எதுவும் தொடாது
பிள்ளையார் அப்பன் பெரிதாய் காக்க
பகையும் சூதும் எதிரில் படாமல்
பானை வயிற்றோன் பக்கம் காக்க
நகமும் ஓடும் உருவமும் கொண்டு
நலிவுகள் எதுவும் வராது காக்க
பேய்களும் முனிகளும் பிசாசு எவையும்
பிரமராட்சதரும் கொடியவர் எவரும்
சேர்ந்தென்னை தொடரா வண்ணம்
என்றும் சிவனார் முதல் மகன் காக்க
நோய்கள் நொடிகள் வராத வண்ணம்
பூதண உருவ மேளன் காக்க
பிணிகள் எதுவும் பக்கம் வராமல்
பிரணவப் பொருளோன் புகழாய் காக்க
இன்றே வேண்டி து தி செய்கின்றோம்
எம்மை காப்பாய் சற்குரு நாதா
என்றும் உந்தன் நினைவை வைக்கும்
எளியேன் ஆசையை நிறைவேற்றிடுவாய்
குன்றில் குன்றாய் விரியும் குணமே
கோலாகலமே பக்தியின் மணமே
வென்றார் வெல்வார் அனைவரின் பின்னும்
வெற்றியின் விளைவாய் விரியும் வித்தே
காலன் அவனையும் நடுங்கிட செய்யும்
கால காலனே கணபதி நாதா
வேலனை வள்ளி விரும்பிட செய்த
செங்கதி உருவே விஜய கணபதி
காவிரி என்னும் மாநதி தன்னை
காசினி ஓடிட செய்த களிறே
பூவடி உயரம் கொண்டு உலகினை
முனைப்புடன் காக்கும் மோன நாதனே
பண்டாசுரனின் விக்ன சக்கரம்
பயனில்லாமல் செய்த பரமனே
அண்டாதெந்தத் துயரம் என்றே
அருளாய் நிற்கும் அன்பானந்தா
ஆற்றல் யாவும் தருவார் போற்றி
அறுகம் புல்லில் இருப்பாய் போற்றி
ஏற்றம் என்றும் தருவாய் போற்றி
இகபர சுகமென விரிவாய் போற்றி
பிரம்ம ரூபனே சரணம் சரணம்
பிரணவ வேழனே சரணம் சரணம்
பிரம்மச்சாரியே சரணம் சரணம்
பிராண நாதனே சரணம் சரணம்
கஜமுக நாதா கழலடி சரணம்
தேவ விநாயகா செவ்வடி சரணம்
மகா கணேச மலரடி சரணம்
ஜெயஜெய கணபதி ஜெயஜெய கணபதி
ஜெயஜெய கணபதி சரணம் சரணம்
சரணம் சரணம் கணபதி சிவ ஓம்
சரணம் சரணம் விநாயகா சரணம்
வியாழன், 15 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)