செவ்வாய், 27 செப்டம்பர், 2011

சகலகலாவல்லிமாலை


கட்டளைக் கலித்துறை

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனற் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர்
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10

புதன், 14 செப்டம்பர், 2011

ஸ்வாமியே சரணம்



அரிகர புத்திரனை ஆனந்த ரூபனை
இருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியை
சபரி கிரீசனை சாந்த சொரரூபனை
தினம் தினம் போற்றி பணிந்திடு வோமே

ஐயப்ப தேவன் கவசமிதனை
அனுதினம் சொல்ல அல்லகள் ஒழியும்
தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்
நாடிய பொருளும் நலமும் வருமே

மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய
மணிகண்ட தேவா வருக வருக
மாயோன் மைந்தா வருக வருக
ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக

புலிவாகனனே வருக வருக
புவியெல்லாம் காத்திடுட வருக வருக
பூரணை நாதனே வருக வருக
புண்ணிய மூர்த்தியே வருக வருக

பூத நாயகா வருக வருக
புஸ்களைபதியே வருக வருக
பொன்னம்பலத்துறை ஈசா வருக
அடியாரைக் காக்க அன்புடன் வருக

வருக வருக வாசவன் மைந்தா
வருக வருக வீரமணிகண்டா
வஞ்சனை நீக்கிட வருக வருக
வல்வினை போக்கிட வருக வருக

ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக
அச்சம் அகற்றிட அன்பனே வருக
இருவினை களைந்தே எனையாட்கொள்ள
இருமூர்த்தி மைந்தா வருக வருக

பதினென்படியை மனதில் நினைக்க
பண்ணிய பாவம் பொடிப் பொடியாகும்
ஐயப்பா சரணம் என்றே கூறிட
ஐம்பூதங்களும் அடிபணிந்திடுமே

சபரிகிரீசனை நினைந்தே நீறிட
துன்பங்கள் எல்லாம் தூள் தூளாகும்
சரணம் சரணம் என்றே சொல்லிட
சித்திகள் யாவும் வந்தடைந்திடுமே

பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பகைவர் களெல்லாம் பணிந்தே வணங்குவார்
ஐயப்பன் பாதம் அனுதினம் நினைக்க
அவனியிலுள்ளோர் அடிபணிந்தேத்துவர்

சரணம் சரணம் ஐயப்பா சரணம்
சரணம் சரணம் சபரி கிரீசா
சரணம் சரணம் சத்குரு நாதா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்

வேண்டுதல்

சிவனார் மகன் என் சிரசினைக் காக்க
நெடுமால் மைந்தன் நெற்றியைக் காக்க
கஜமுகன் தம்பி கண்ணினைக் காக்க
நாரணன் பாலன்நாசியைக் காக்க

இருமூர்த்தி மைந்தன் இன் இருசெவி காக்க
வாபரின் தோழன் வாயினைக் காக்க
பம்பையின் பாலன் பற்களைக் காக்க
நான்முக பூஜ்யன் நாவினைக் காக்க

கலியு வரதன் என் கழுத்தினைக் காக்க
குமரன் தம்பி என் குரல்வளை காக்க
புஸ்கள நாதன் புஜங்களை காக்க
முக்கண்ணன் பாலன் முழங்கையைக் காக்க

வீரமணிகண்டன் விரல்களைக் காக்க
மணிகண்டன் தேவன் மார்பினைக் காக்க
கயிலை மைந்தன் கைகளை காக்க
வன்புலி வாகனன் வயிற்றினைக் காக்க

முழுமுதற் கடவுள் என் முதுகினை காக்க
கற்பூர ஜோதி என் கணைக்கால் காக்க
பந்தள் பாலன் பாதத்தினைக் காக்க
விஜய குமாரன் விரல்களைக் காக்க

அன்னதானப் பிரபு அங்கமெல்லாம் காக
ஆரியங்கா ஜோதி அன்புடன் காக்க
காட்டளரூபி காலையில் காக்க
நவக்ரநாதன் நடுப்பகல் காக்க

மாலின் மகனார் மாலையில் காக்க
அரிகர சுதனார் அந்தியில் காக்க
இன்மயஜோதி இரவினில் காக்க
எரிமேலி சாஸ்த என்றுமே காக்க

அரியின் மகனார் அனுதினம் காக்க
நடராஜன் பாலன் நாள்தோறும் காக்க
வாசவன் செல்வன் வலப்புறம் காக்க
இருமுடிஈசன் இடப்புறம் காக்க

காக்க காக்க கருணையால் காக்க
பார்க்க பார்க்க என் பாவம் பொடிபட
இம்மையிம் மறுமையும் இல்லாதொழிந்திட
ஈசன் மகன் எனை என்றுமே காக்க

கொடிய விலங்குகளும் கொள்ளை நோய்களும்
குருதியை குடிக்கும் துஸ்டப் பேய்களும்
காந்தமலை தனைக் கருத்தில் கொண்டிட
கலங்கி மறைந்திட கருனை புரிவாய்

பில்லி சூனியம் பலவித வஞ்சனை
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பஞ்சாய் ப|றக்க வரமெனக் கருள்வாய்
பயங்களை போக்கி அபயம் அளிப்பாய்

வாதம் பித்தம் சிலேட்சுமத்துடனே
வாந்தியும் பேதியும் வலிப்பும் சுளுக்கும்
எவ்வித நோயும் எனையணுகாமல்
என்றுமே காப்பாய் எரிமேலி தேவா

கல்வியும் செல்வமும் கள்ளமில்லா மனமும்
நல்லோர் உறவும் நாளும் அருள்வாய்
நல்ல மனதுடனே உனை நான் துதிக்க
நித்தமும் அளுள்வாய் சபரிகிரீசா

காமம் குரோதம் லோபம் மோகம்
மதமச் சர்யமெனும் ஐம்பெரும் பேய்களும்
என்றுமே என்னை அணுகி விடாமல்
ஐயப்ப தேவா வரமெனுக் கருள்வாய்

மூப்பும் பிணியும் வ|றுமையும் பசியும்
வந்தெனை வாட்டி வதைசெயாமல்
உள்ளன் புடனே உந்திரு நாமம்
அனுதினம் சொல்ல அருள் தருவாயே

அரிகர புத்ரா அன்பா நமோ நம
சபரிகிரீசா சாஸ்தா நமோ நம
பதினென் படிவாழ் பரமா நமோ நம
ஐங்கரன் சோதரா ஐயப்பா நமோ நம

பொன்னம் பலத்துறை புண்யா நமோ நம
புலிப்பால் ஈந்த புண்யா நமோ நம
கரிகா யுதமுடைச் சுந்ரா நமோ நம
மகிஸி மர்த்தனா மணிகண்டா நமோ நம

சரணம் சரணம் சபரிகிரீசா
சரணம் சரணம் சத்ய ஸ்வரூபா
சரணம் சரணம் சர்வ தயாளா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்

==================================================================

ஓம்         கன்னிமூல கணபதி பகவானே       சரணம் ஐயப்பா
ஓம்         காந்தமலை ஜோதியே                 சரணம் ஐயப்பா
ஓம்         அரிகர சுதனே                          சரணம் ஐயப்பா
ஓம்         அன்னதான பிரபுவே                   சரணம் ஐயப்பா
ஓம்         ஆறுமுகன் சோதரனே                சரணம் ஐயப்பா
ஓம்         ஆபத்தில் காப்போனே                சரணம் ஐயப்பா
ஓம்         இன்தமிழ் சுவையே                    சரணம் ஐயப்பா
ஓம்         இச்சை தவிப்பவனே                  சரணம் ஐயப்பா
ஓம்         ஈசனின் திருமனே                     சரணம் ஐயப்பா
ஓம்         ஈடில்லாத் தெய்வமே                 சரணம் ஐயப்பா
ஓம்         உண்மைப் பரம் பொருளே            சரணம் ஐயப்பா

ஓம்         உலகாளும் காவலனே                சரணம் ஐயப்பா
ஓம்         ஊமைக்கருள் புரிந்தவனே           சரணம் ஐயப்பா
ஓம்         ஊழ்வினை அழிப்பவனே             சரணம் ஐயப்பா
ஓம்         எளியோர்க்கு அருள்பவனே          சரணம் ஐயப்பா
ஓம்         எங்கள் குலதெய்வமே                சரணம் ஐயப்பா
ஓம்         ஏழைப்பங்காளனே                    சரணம் ஐயப்பா
ஓம்         ஏகாந்த மூர்த்தியே                    சரணம் ஐயப்பா
ஓம்         ஐங்கரன் தம்பியே                     சரணம் ஐயப்பா
ஓம்         ஒப்பில்லாத் திருமேனியே            சரணம் ஐயப்பா
ஓம்         ஒளிரும் திருவிளக்கே                சரணம் ஐயப்பா
ஓம்         ஓங்காரப் பரம்பொருளே              சரணம் ஐயப்பா
ஓம்         ஓதும் மறைப்பொருளே               சரணம் ஐயப்பா

ஓம்         ஒளடதங்கள் அருள்பவனே           சரணம் ஐயப்பா
ஓம்         சௌபாக்கியம் அளிப்பவனே         சரணம் ஐயப்பா
ஓம்         கலியுக வரதனே                       சரணம் ஐயப்பா  
ஓம்         சபரிமலை சாஸ்தாவே                சரணம் ஐயப்பா
ஓம்         சிவன்மால் திருமகனே                சரணம் ஐயப்பா
ஓம்         சிவவைணவ ஐக்கியமே              சரணம் ஐயப்பா
ஓம்         அச்சங்கோவில் அரசே                சரணம் ஐயப்பா
ஓம்         ஆரியங்காவு ஐயாவே                 சரணம் ஐயப்பா
ஓம்         குளத்துப் புழைப் பாவலனே          சரணம் ஐயப்பா
ஓம்         பொன்னம்பல வாசனே                சரணம் ஐயப்பா
ஓம்         வில்லாளி வீரனே                  சரணம் ஐயப்பா
ஓம்         வீரமணி  கண்டனே                  சரணம் ஐயப்பா
ஓம்         உத்திரத்தில் உதித்தவனே            சரணம் ஐயப்பா

ஓம்         உத்தமனே சத்தியனே                  சரணம் ஐயப்பா
ஓம்         பம்பையிலே பிறந்தவனே             சரணம் ஐயப்பா
ஓம்         பந்தள மாமணியே                     சரணம் ஐயப்பா
ஓம்         சகலகலை வல்லோனே               சரணம் ஐயப்பா
ஓம்         சாந்தநிறை மெய்ப்பொருளே          சரணம் ஐயப்பா
ஓம்         குருமகனின் குறைதீர்த்தவனே       சரணம் ஐயப்பா
ஓம்         குருதட்சணை அளித்தவனே          சரணம் ஐயப்பா
ஓம்         புலிப்பாலைக் கொணர்ந்தவனே      சரணம் ஐயப்பா
ஓம்         வன்புலியின் வகனனே                சரணம் ஐயப்பா
ஓம்         தாயின் நோய் தீர்த்தவனே            சரணம் ஐயப்பா
ஓம்         குருவின் குருவே                      சரணம் ஐயப்பா
ஓம்         வாபரின் தோழனே                    சரணம் ஐயப்பா
ஓம்         துளசிமணி மார்பனே                  சரணம் ஐயப்பா
ஓம்         தூயவுள்ளம் அளிப்பவனே            சரணம் ஐயப்பா
ஓம்         இருமுடிப்பிரியனே                     சரணம் ஐயப்பா
ஓம்         எருமேலி சாஸ்தாவே                  சரணம் ஐயப்பா
ஓம்         நித்திய பிரம்மச் சாரியே               சரணம் ஐயப்பா
ஓம்         நீலவஸ்திர தாரியே                    சரணம் ஐயப்பா
ஓம்         பேட்டை துள்ளும் பேரருளே           சரணம் ஐயப்பா
ஓம்         பெரும் ஆணவத்தை அழிப்பவனே    சரணம் யஐப்பா
ஓம்         சாஸ்தாவின் நந்தவனமே              சரணம் ஐயப்பா
ஓம்         சந்திதரும் பேரழகே                    சரணம் ஐயப்பா
ஓம்         பேருத்தோடு தரிசனமே                சரணம் ஐயப்பா
ஓம்         பேதமையை ஒழிப்பவனே             சரணம் ஐயப்பா
ஓம்         காளைகட்டி நிலையமே                சரணம் ஐயப்பா
ஓம்         அதிர்வேட்டுப் பிரியனே                சரணம் ஐயப்பா
ஓம்         அழுதமலை ஏற்றமே                   சரணம் ஐயப்பா
ஓம்         ஆனந்தமிகு பஜனைப் பிரியனே       சரணம் ஐயப்பா
ஓம்         கல்லிடும் குன்றே                      சரணம் ஐயப்பா
ஓம்         உடும்ப்பாறைக் கோட்டையே          சரணம் ஐயப்பா
ஓம்         இஞ்சிப் பாறைக் கோட்டையே        சரணம் ஐப்பா
ஓம்         கரியிலந் தோடே                       சரணம் ஐயப்பா
ஓம்         கரிமலை ஏற்றமே                      சரணம் ஐயப்பா
ஓம்         கரிமலை இறக்கமே                    சரணம் ஐயப்பா
ஓம்         பெரியானை வட்டமே                   சரணம் ஐயப்பா
ஓம்         சிறியானை வட்டமே                    சரணம் ஐயப்பா
ஓம்         பம்பா நதி தீர்தமே                      சரணம் ஐயப்பா
ஓம்         பாவமெல்லாம் அழிப்பவனே          சரணம் ஐயப்பா
ஓம்         திருவேணிச் சங்கமமே                சரணம் ஐயப்பா
ஓம்         ஸ்ரி இராமர் பாதமே                   சரணம் ஐயப்பா
ஓம்         சக்தி பூஜைக் கொண்டவனே          சரணம் ஐயப்பா
ஓம்         சபரிக் கருள் செய்தவனே              சரணம் ஐயப்பா

ஓம்         தீப ஜோதித் திரு ஒளியே              சரணம் ஐயப்பா
ஓம்         தீராத நோய்  தீர்பவனே                சரணம் ஐயப்பா
ஓம்         பம்பா விளக்கே                         சரணம் ஐயப்பா
ஓம்         பழவினைகள் ஒழிப்பவனே            சரணம் ஐயப்பா
ஓம்         தென்புலத்தார் வழிபாடே              சரணம் ஐயப்பா
ஓம்         திருபம்பையின் புண்ணீயமே           சரணம் ஐயப்பா
ஓம்         நீலிமலை ஏற்றமே                     சரணம் ஐயப்பா
ஓம்         நிறைவுள்ளம் தருபவனே              சரணம் ஐயப்பா
ஓம்         அப்பாசி மேடே                          சரணம் ஐயப்பா
ஓம்         இப்பாசிக் குழியே                       சரணம் ஐயப்பா
ஓம்         சபரி பீடமே                              சரணம் ஐயப்பா
ஓம்         சரங்குத்தி ஆலே                        சரணம் ஐயப்பா
ஓம்         உரல்குழி தீர்த்தமே                     சரணம் ஐயப்பா
ஓம்         கருப்பண்ண சாமியே                   சரணம் ஐயப்பா
ஓம்         கடுத்த சாமியே                          சரணம் ஐயப்பா
ஓம்         பதின்னெட்டாம் படியே                 சரணம் ஐயப்பா
ஓம்         பகவானின் சன்னிதியே                 சரணம் ஐயப்பா
ஓம்         பரவசப் பேருணர்வே                    சரணம் ஐயப்பா
ஓம்         பசுவின் நெய் அபிஸேகமே             சரணம் ஐயப்பா
ஓம்         கற்பூரப் பிரியனே                        சரணம் ஐயப்பா
ஓம்         நாகராசப் பிரபுவே                       சரணம் ஐயப்பா
ஓம்         மாளிகைப் புறத்தம்மனே               சரணம் ஐயப்பா
ஓம்         மஞ்சமாதா திருவருளே                 சரணம் ஐயப்பா
ஓம்         அக்கினிக் குண்டமே                     சரணம் ஐயப்பா
ஓம்         அலங்காரப் பிரியனே                    சரணம் ஐயப்பா
ஓம்         பஸ்மக் குளமே                          சரணம் ஐயப்பா
ஓம்         சற்குரு நாதனே                          சரணம் ஐயப்பா
ஓம்         மகர ஜோதியே                           சரணம் ஐயப்பா
ஓம்         மங்கள மூர்த்தியே                       சரணம் ஐயப்பா